sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

திருக்கல்யாண உற்சவத்துடன் கந்த சஷ்டி விழா நிறைவு

/

திருக்கல்யாண உற்சவத்துடன் கந்த சஷ்டி விழா நிறைவு

திருக்கல்யாண உற்சவத்துடன் கந்த சஷ்டி விழா நிறைவு

திருக்கல்யாண உற்சவத்துடன் கந்த சஷ்டி விழா நிறைவு


ADDED : அக் 29, 2025 01:53 AM

Google News

ADDED : அக் 29, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், முருகன் கோவில்களில் வள்ளி, தெய்வானை திருக்கல்யாணத்துடன் கந்த சஷ்டி விழா நிறைவடைந்தது.

சேலம், அம்மாபேட்டை செங்குந்தர் சுப்ரமணியர் கோவிலில், கந்த சஷ்டி விழா கடந்த, 22ல் தொடங்கியது. நேற்று முன்தினம் சூரசம்ஹாரம் நடந்தது. நேற்று திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. இதற்காக, சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் வள்ளி, தெய்வானை சமேத சுகவன சுப்பிரமணியருக்கு அபி ேஷகம் செய்து சிறப்பு அலங்காரத்துடன் பூஜை செய்யப்பட்டது. மாலை, மகா மண்டபத்தில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய உற்சவருக்கு, புது பட்டாடைகள், மலர் மாலைகளால், மாப்பிள்ளை மணப்பெண் போல் அலங்காரம் செய்து, சிவாச்சாரியார்கள் திருமாங்கல்யத்துக்கு யாக பூஜை செய்தனர். பக்தர்களின், 'அரோகரா' கோஷம் முழங்க, சுப்ரமணியர் கரத்தில், திருமாங்கல்யத்தை வைத்து பூஜித்து, தெய்வானை மற்றும் வள்ளி கழுத்தில் அணிவித்தனர். பக்தர்கள் தரிசித்தனர். பின் அன்னதானம் வழங்கப்பட்டது.அதேபோல் பட்டைக்கோவில் பாவடி செங்குந்தர் சுப்ரமணியர், செவ்வாய்ப்பேட்டை சித்திரைச்சாவடி முருகன், பேர்லேண்ட்ஸ் முருகன் உள்பட அனைத்து முருகன் கோவில்களிலும், திருக்கல்யாண உற்சவத்துடன் கந்த சஷ்டி விழா நிறைவு பெற்றது.

ஓமலுார் செவ்வாய்சந்தை அருகே காசி விஸ்வநாதர் ஆலயத்தில், தனி பிரகாரத்தில் உள்ள செந்திலாண்டவருக்கு, வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடந்தது. தாரமங்கலம் சுப்ரமணியர் கோவிலில் உற்சவர் சுப்ரமணியர், ஸ்ரீவள்ளி, தெய்வானை சுவாமிக்கு, யாக வேள்வி செய்து, திருக்கல்யாணம் நடந்தது.

ஆத்துார் அருகே வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலில், நேற்று இரவு, பாலசுப்ரமணியர் மாப்பிள்ளை அலங்காரத்தில் திருவீதி உலா வந்தார். இரவு, 8:00 மணிக்கு, தெய்வானையை திருக்கல்யாணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். அதேபோல் ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. மூலவர் முத்துமலை முருகன், தங்க கவசத்தில் அருள்பாலித்தார்.

கெங்கவல்லி பாலதண்டாயுதபாணி, தம்மம்பட்டி திருமண்கரடு பாலதண்டாயுதபாணி உள்ளிட்ட முருகன் கோவில்களில் திருக்கல்யாணம் நடந்தது.






      Dinamalar
      Follow us