sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கெம்பிளாஸ்ட் ஆலை விரிவாக்கம்கருத்துகேட்பு கூட்டத்தில் தள்ளுமுள்ளு

/

கெம்பிளாஸ்ட் ஆலை விரிவாக்கம்கருத்துகேட்பு கூட்டத்தில் தள்ளுமுள்ளு

கெம்பிளாஸ்ட் ஆலை விரிவாக்கம்கருத்துகேட்பு கூட்டத்தில் தள்ளுமுள்ளு

கெம்பிளாஸ்ட் ஆலை விரிவாக்கம்கருத்துகேட்பு கூட்டத்தில் தள்ளுமுள்ளு


ADDED : டிச 24, 2024 08:00 AM

Google News

ADDED : டிச 24, 2024 08:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: மேட்டூர் கெம்பிளாஸ்ட் ஆலை விரிவாக்கத்துக்காக, நேற்று நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் கருத்து சொல்ல குவிந்த மக்-களால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம், மேட்டூர், ராமன்நகரில் கெம்பிளாஸ்ட் ரசா-யன ஆலை உள்ளது. இங்குள்ள ஒன்றாவது ஆலையில், குளிர்ப-தன வாயு உற்பத்தி அலகை விரிவாக்கம் செய்ய நிர்வாகம் திட்ட-மிட்டுள்ளது. மேலும், இரண்டாவது அலகில் தயார் செய்யப்-படும் பாலிவினைல் குளோரைடு (பி.வி.சி.,) பேஸ்ட் ரெசின் உற்-பத்தியை ஆண்டுக்கு, 66 ஆயிரம் டன்னில் இருந்து, 1.45 லட்சம் டன்னாக உயர்த்த முடிவு செய்துள்ளது. அதற்கு கூடுதலாக, 300 கோடி ரூபாய் செலவாகும்.

ஆலை விரிவாக்கத்தின் மூலம், 150 ஊழியர்களுக்கு நிரந்தரமா-கவும், 200 ஊழியர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலும் வேலை-வாய்ப்பு கிடைக்கும். ஆலை விரிவாக்கம் செய்யவும், உற்பத்-தியை அதிகரிக்கவும், சுற்றுப்பகுதி மக்களின் கருத்துகளை மாசு-கட்டுப்பாடு வாரியம் கேட்டு, அவர்களின் விருப்பத்தை பொறுத்து வாரியம் அனுமதி வழங்கும். அதன்படி நேற்று, சேலம் கலெக்டர் மற்றும் மாசுகட்டுப்பாடு வாரிய மாவட்ட தலைவர் பிருந்தாதேவி தலைமையில், மேட்டூர், கருமலைக்-கூடல் தனியார் மண்டபத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. மேட்டூர் சப் - கலெக்டர் பொன்மணி, ராஜ்யசபா எம்.பி.,சந்திர-சேகரன், எம்.எல்.ஏ., சதாசிவம் பங்கேற்றனர்.மேட்டூர் முன்னாள் எம்.எல்.ஏ., பார்த்திபன், வீரக்கல்புதுார், பி.என்.பட்டி டவுன் பஞ்., தி.மு.க.,- அ.தி.மு.க., நிர்வாகிகள், பொதுமக்கள் என, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்-டத்தில் பங்கேற்ற மக்கள் பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், பொது-மக்கள் பலர் ஆலை சுற்றுப்பகுதியில் உள்ள பி.என்.பட்டி, வீரக்-கல்புதுார் டவுன்பஞ்., கோனுார் ஊராட்சியில் நிலத்தடி நீர் பாதிக்-கப்பட்டுள்ளது. பெரும்பாலானோர் புற்றுநோயால் பாதித்துள்-ளனர். ஆலை சுற்றுப்பகுதியில் மக்கள் பாதிக்கும் நிலையில், வெளிமாவட்டத்தில் இருந்து வரும் ஊழியர்களுக்கு வேலை-வாய்ப்பு வழங்கப்படுகிறது.விரிவாக்கம் செய்யப்படும் ஆலையின், சுற்றுப்பகுதியில் உள்ள ஏராளமான பொறியியல் படித்த இளைஞர்கள் உள்ளனர். அவர்க-ளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். அதனையே பெரும்பாலான பொதுமக்களும் கூறினர். அப்போது கருத்து சொல்ல ஏராளமானோர் முன்பகுதிக்கு சென்றதால், அவர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அனைவரும் பேசு-வதற்கு, கலெக்டர் பிருந்தாதேவி அனுமதி வழங்கினார். ஆலை தொடர்பாக, 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி, இரண்டரை மணி நேரம் நடந்த கருத்து கேட்பு கூட்டத்துக்கு பின்பு கலெக்டர் மற்றும் அலுவலர்கள் புறப்பட்டு சென்றனர்.






      Dinamalar
      Follow us