sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கடத்தப்பட்ட தொழிலதிபர் போலீசில் ஒப்படைப்பு ஈரோட்டை சேர்ந்த ஒருவர் கைது

/

கடத்தப்பட்ட தொழிலதிபர் போலீசில் ஒப்படைப்பு ஈரோட்டை சேர்ந்த ஒருவர் கைது

கடத்தப்பட்ட தொழிலதிபர் போலீசில் ஒப்படைப்பு ஈரோட்டை சேர்ந்த ஒருவர் கைது

கடத்தப்பட்ட தொழிலதிபர் போலீசில் ஒப்படைப்பு ஈரோட்டை சேர்ந்த ஒருவர் கைது


ADDED : டிச 22, 2024 12:56 AM

Google News

ADDED : டிச 22, 2024 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், டிச. 22-

சேலத்தில் கடத்தப்பட்ட தொழில் அதிபரை, போலீசில் ஒப்படைத்த பின், அவரை அழைத்து வந்த, கடத்தல் கும்பலை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

சேலம், சீரங்காபாளையம், ராஜாஜி தெருவை சேர்ந்த தொழில் அதிபர் ரவிக்குமார், 51. இவர் சேலம், திருச்செங்கோடு, கோவை, உடுமலைப்பேட்டை உள்ளிட்ட இடங்களில், சொந்தமாக நுால் மில் நடத்தினார். தொழில் நஷ்டத்தால் கடைசியாக கோவையில் உள்ள மில்லை மட்டும் நடத்தி வந்தார். அதை வைத்து வங்கியில் 35 கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாததால், சமீபத்தில் அந்த நுால் மில் ஜப்தி செய்யப்பட்டது.

கோவை நுால் மில்லை நம்பி, 1.5 கோடி ரூபாய் கடன் கொடுத்த ஈரோட்டை சேர்ந்த தேவேந்திர சோப்ரா, நாகராஜ் ஆகியோர் கடனை திருப்பி தரும்படி கேட்டுள்ளனர். தொடர்ந்து நேற்று முன்தினம் இரவில் அவர்கள் கும்பலாக காரில் வந்து, தொழிலதிபரிடம் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்தனர். அப்போது ஏற்பட்ட கடும் வாக்கு

வாதத்தில் தொழிலதிபரை காரில் கடத்திச்சென்றனர். இதுகுறித்து ரவிக்குமாரின் தம்பி அனில்குமார் புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார்,

அங்கிருந்த, 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தனர்.

மேலும் சோதனைச்சாவடி போலீசாரை உஷார்படுத்தி, சுங்கச்சாவடியில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. தவிர ரவிக்குமாரின் மொபைல் மூலம், அவரது இருப்பிடம் கண்டறியப்பட்டது. அதனால் கடத்தல் கும்பல் உஷாராகி, அவர்களில் ஒருவர், ரவிக்குமாரை அழைத்துக்கொண்டு, இரவு, 11:45 மணிக்கு, அஸ்தம்பட்டி போலீசில் ஆஜர்படுத்தினார்.

விசாரணையில் அந்த நபர், ஈரோடு, நசியனுார், முள்ளம்பட்டியை சேர்ந்த நாகராஜ், 57, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், ரவிக்குமாரிடமும் கடத்தல் சம்பவம் குறித்தும் தொடர்ந்து விசாரிக்கின்றனர். நாகராஜ் வாக்குமூலப்படி, ஈரோட்டை சேர்ந்த தேவேந்திர சோப்ராவை கைது செய்ய, தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us