sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வறண்டு போகும் கிணறுகள் கொளத்தூர் விவசாயிகள் விரக்தி

/

வறண்டு போகும் கிணறுகள் கொளத்தூர் விவசாயிகள் விரக்தி

வறண்டு போகும் கிணறுகள் கொளத்தூர் விவசாயிகள் விரக்தி

வறண்டு போகும் கிணறுகள் கொளத்தூர் விவசாயிகள் விரக்தி


ADDED : மார் 20, 2024 02:17 AM

Google News

ADDED : மார் 20, 2024 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்:கொளத்துார் வட்டாரத்தில் ஆண்டு சராசரி மழையளவு, 1,091.6 மி.மீ., கடந்த, 2022 - 23ல், 794.8 மி.மீ., மழையே பொழிந்தது. இது சராசரியை விட, 304.8 மி.மீ., குறைவு. இதனால் வறட்சியால் காவிரியில் நீர்வரத்து வெகுவாக குறைந்து விட்டது. கொளத்துார் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கிணறுகளும் வறண்டு போக தொடங்கியுள்ளன.

கொளத்துார் வட்டாரத்தில், 40,335 ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. இதில், 25,950 ஏக்கர் நிலங்களில் நெல், சோளம், வேர்கடலை, வாழை, மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. வட்டாரத்தில் மொத்தம், 4,000 முதல், 4,200 விவசாய கிணறுகள் உள்ளன. ஒவ்வொன்றும், 25 அடி முதல், 100 அடி ஆழம் கொண்டவை. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் நிலத்தடி நீரும் குறைந்த நிலையில் பெரும்பாலான விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளும் தண்ணீரின்றி வறண்டுவிட்டன.

சில கிணறுகளில், 2 அடி உயரம் மட்டுமே தண்ணீர் காணப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததாலும், கிணறுகள் வறண்டதாலும் நடப்பாண்டு கோடைகால பயிர்களை சாகுபடி செய்ய முடியாமல் பெரும்பாலான விவசாயிகள், நிலங்களை தரிசாக வைத்துள்ளனர். பல ஆண்டுகளுக்கு பின் தற்போது நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கிணறுகளும் வறண்டு போக தொடங்கியுள்ளது, விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.






      Dinamalar
      Follow us