sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிேஷக விழா தொடக்கம்

/

வரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிேஷக விழா தொடக்கம்

வரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிேஷக விழா தொடக்கம்

வரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிேஷக விழா தொடக்கம்


ADDED : ஜூன் 06, 2025 01:30 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம், பட்டைக்கோவில் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிேஷக விழா, விஷ்வக்சேனர் பூஜை, புண்யாவாஜனம், வாஸ்து பூஜை, அங்குரார்பணம் ஆகியவற்றுடன், நேற்று மாலை தொடங்கியது. தொடர்ந்து கலைமாமணி அபர்ணா ரமேஷ் குழுவினரின், ஹரி நாம சங்கீத இசை கச்சேரி நடந்தது.

இன்று, முதல் மற்றும் இரண்டாம் கால யாக பூஜைகள், புதிதாக பிரதிஷ்டை செய்யப்படவுள்ள தன்வந்திரி பகவான் சிலை ஜலாதிவாசம், சாயாதிவாசம் மற்றும் கண் திறப்பு ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து மாலையில் அனந்தபத்மநாபாச்சாரியார், 'அத்திவரதரின் நான்கு யுக ரகசியம்' தலைப்பில் பேசுகிறார். நாளை, 3, 4ம் கால யாகசலை பூஜைகள், 17 கலச அபிேஷகம், அலங்கார பூஜைகள், மாலையில் அபர்ணா ரமேஷ் குழுவினரின் பரதநாட்டியம் நடக்க உள்ளது. வரும், 8 காலை, 5ம் கால யாக பூஜை, மகா பூர்ணாஹூதியுடன் நிறைவடைந்து, காலை, 7:30 மணிக்கு மேல், 8:30 மணிக்குள் கும்பாபிேஷகம் நடக்க உள்ளது. அன்று மாலை திருக்கல்யாண உற்சவம், சப்பரத்தில் திருவீதி உலாவுடன் கும்பாபிேஷக விழா நிறைவு பெறும்.






      Dinamalar
      Follow us