ADDED : ஜன 03, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
சேலம், ஜன. 3--
சேலம் ஜில்லா சுமை துாக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில், குரங்குச்சாவடியில் உள்ள சேகோசர்வ் முன் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட பொதுச்செயலர் கோவிந்தன் தலைமை வகித்தார். அதில், சேகோ, ஸ்டார்ச் உற்பத்தி பொருட்கள் அனைத்தையும் சேகோசர்வ் மூலம் மட்டும் விற்க வேண்டும்; உற்பத்தியாளர்கள் நேரடி விற்பனை செய்வதை தடுக்க வலியுறுத்தினர். தலைவர் ஆறுமுகம், சுமை சம்மேளன மாநில தலைவர் வெங்கடபதி, சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் உதயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.