sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஊரக திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பம் உயர்த்தப்படாத உதவித்தொகையால் ஆர்வமின்மை

/

ஊரக திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பம் உயர்த்தப்படாத உதவித்தொகையால் ஆர்வமின்மை

ஊரக திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பம் உயர்த்தப்படாத உதவித்தொகையால் ஆர்வமின்மை

ஊரக திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பம் உயர்த்தப்படாத உதவித்தொகையால் ஆர்வமின்மை


ADDED : நவ 19, 2024 05:12 AM

Google News

ADDED : நவ 19, 2024 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: ஊரக திறனாய்வு தேர்வுக்கான உதவித்தொகை உயர்த்தப்படாததால், மாணவர்களிடையே விண்ணப்பிப்பதில் ஆர்வமின்மை காணப்படுகிறது.

தமிழகத்தின் ஊரக பகுதிகளில் படிக்கும் மாணவ, மாணவிய-ருக்கு, ஊரக திறனாய்வு தேர்வு ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் நடத்தப்படுகிறது. இதில், குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்குள் இருக்கும், 9 ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். தேர்வில் மாவட்டத்துக்கு, 100 பேர் தேர்வு செய்யப்பட்டு, ஆண்டுக்கு, 1,000 ரூபாய் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டு ஊரக திறனாய்வு தேர்வு, டிச., 14ல் நடைபெற உள்ளது. நவ., 20 வரை விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத்துறை அறிவித்-துள்ளது. அனைத்து மாணவர்களையும், விண்ணப்பிக்க வைக்கும்-படி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இத்-தேர்வில் பங்கேற்க மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால், விண்ணப்பிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் பங்கேற்கும் தேர்வர் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது.இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: தமிழகத்தில் ஊரக திற-னாய்வு தேர்வு, 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வரு-கிறது. கடந்த, 25 ஆண்டுகளாக இந்த உதவித்தொகை உயர்த்தப்ப-டாமல், அதே, 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதனால், இதை பெறுவதற்கான போட்டி மனப்பான்மை, மாணவர்களிடம் இல்லை. இதனால், ஊரக திறனாய்வு தேர்வுக்கு கட்டாயப்ப-டுத்தி, விண்ணப்பிக்க வைக்க வேண்டிய நிலை உள்ளது. அதில் பலரும் தேர்வில் பங்கேற்பதில்லை. உதவித்தொகையை உயர்த்தி வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us