ADDED : ஜூலை 07, 2025 03:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: மேட்டூர் அணை நிரம்பியதால், திப்பம்பட்டி நீரேற்று நிலையத்தி-லிருந்து, ஏரிகளுக்கு நீரேற்றும் பணி கடந்த ஜூன், 29ல் தொடங்-கப்பட்டது. இதனால், 3 நாட்களுக்கு முன் மானத்தாள் ஏரி நிரம்பி கோடி விழுந்தது.
அதிலிருந்து வெளியேறிய நீர், தொளசம்பட்டி ஏரிக்கு சென்றது. நேற்று முன்தினம் மாலை, அந்த ஏரியும் நிரம்பி கோடி விழுந்-தது. தொடர்ந்து பெரியேரிப்பட்டி ஏரிக்கு தண்ணீர் செல்கிறது.