sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு நில அளவீடு பணி ஒத்திவைப்பு

/

சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு நில அளவீடு பணி ஒத்திவைப்பு

சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு நில அளவீடு பணி ஒத்திவைப்பு

சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு நில அளவீடு பணி ஒத்திவைப்பு


ADDED : ஜூலை 23, 2025 02:02 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி, மல்லுார் - வீரபாண்டி சாலையில், வேங்காம்பட்டியில், சேலம் - கரூர் அகல ரயில் பாதை உள்ளது. தினமும் பலமுறை ரயில்வே கேட் மூடப்படுவதால், பள்ளி, கல்லுாரி வாகனங்கள், பஸ், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள், அவசரத்துக்கு செல்ல முடியாமல் காத்திருக்க வேண்டி உள்ளது.

இதனால் சுரங்கப்பாதை அமைக்க, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம், தனியாருக்கு ஒப்பந்தம் விட்டது. ஆனால் சுரங்கப்பாதை அமைக்க, ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதேநேரம் சுரங்கப்பாதை பணியை தொடங்காத மத்திய அரசு, ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து, வரும், 28ல், வேங்காம்பட்டியில் ரயில் மறியல் போராட்டம் நடக்கும் என, சுற்றுவட்டார கிராம மக்கள் சார்பில், 'நோட்டீஸ்' வினியோகிக்கப்பட்டது.

இந்நிலையில், ரயில்வே போலீஸ் பாதுகாப்புடன், வருவாய்த்துறையினர் நில அளவீடு செய்ய, நேற்று வந்தனர். அப்போது அம்பேத்கர் நகர் மக்கள் வந்து, 'சுரங்கப்பாதை அமைத்தால், வீடுகள் பாதிக்கப்படும்' என கூறி

எதிர்ப்பு தெரிவித்தனர். மல்லுார் போலீசார், பேச்சு நடத்தினர்.

அதில், 'இதுதொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் அமைதி பேச்சு நடத்தப்படும். அதுவரை நில அளவீடு பணி ஒத்திவைக்கப்படும்' என கூறினர். இதனால் அனைவரும் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us