ADDED : ஏப் 18, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்
கோவை மாவட்டம், பொள்ளாச்சி டவுன் கிரின் பார்க் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் மகன் கவுரி சங்கர், 19. இவர், சேலத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு எப்.எஸ்.டி. படிப்பு படித்து வருகிறார்.
அதே பகுதியில் வீடு வாடகை எடுத்து தங்கி வருகிறார். கடந்த, 15ல் வீட்டில் இரவு துாங்கி கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் வீட்டினுள் புகுந்து கவுரி சங்கர் மேஜை மீது வைத்திருந்த லேப்டாப், மொபைல்போன் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.
அதிகாலையில் கவுரி சங்கர் பார்த்த போது, மர்ம நபர்கள் வீட்டில் புகுந்து பொருட்களை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து அளித்த புகார்படி, ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

