sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வக்கீல்கள் பணி புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம்

/

வக்கீல்கள் பணி புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம்

வக்கீல்கள் பணி புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம்

வக்கீல்கள் பணி புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 20, 2025 07:19 AM

Google News

ADDED : பிப் 20, 2025 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சென்னை உயர்நீதிமன்றத்தில், 2009 பிப்., 19ல் வக்கீல்கள், நீதி-மன்ற ஊழியர்களை, போலீசார் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதை கண்டித்து, வக்கீல்கள் சார்பில் கருப்பு தினம் கடை-பிடிக்கப்படுகிறது. அதையொட்டி சேலம் வக்கீல் சங்கம் சார்பில், 4,000க்கும் மேற்பட்ட வக்கீல்கள், நேற்று, பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து சேலம் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் கவின், தண்-டபாணி, நாமக்கல் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல் ராஜேஷ் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து, இன்றும் பணி புறக்க-ணிப்பில் ஈடுபட உள்ளனர். மேலும் வக்கீல்கள் சட்டத்தில் மத்-திய அரசு கொண்டு வர உள்ள மாற்றங்களை திரும்ப பெறக்-கோரி, நாளையும் பணி புறக்கணிப்பு போராட்டத்தில்

ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேட்டூர்

மேட்டூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன், மேட்டூர் வக்-கீல்கள் பணியை புறக்கணித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேட்டூர் அணை வக்கீல் சங்க தலைவர் செந்தில், செயலர் மனோகர், பொருளாளர் விஜயராகவன் உள்பட பலர் பங்கேற்-றனர்.

வக்கீல்கள் சேமநல நிதியை, 10 லட்சத்தில் இருந்து, 25 லட்சம் ரூபாயாக உயர்த்தல்; மத்திய, மாநில அரசுகள் வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றக்கோரி கோஷம் எழுப்பினர். சங்க-கிரி வக்கீல் சங்கம் சார்பில், சங்ககிரி, இடைப்பாடியில் உள்ள நீதிமன்ற பணிகளை, வக்கீல்கள் புறக்கணித்தனர்.






      Dinamalar
      Follow us