/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உள்ளாட்சி துறை அதிகாரி பாலியல் புகாரில் கைது
/
உள்ளாட்சி துறை அதிகாரி பாலியல் புகாரில் கைது
ADDED : ஜன 13, 2025 01:02 AM
சேலம்: சேலம் மாவட்டம், வீரக்கல் டவுன் பஞ்., துாய்மை பணியாளர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்டார்.
அவரது மகள், கருணை அடிப்படையில் வாரிசு வேலை கேட்டு, சேலம் மண்டல டவுன் பஞ்., உதவி இயக்குனர் அலுவலக கண்காணிப்பளர் தேவராஜன், 55, என்பவரிடம் விண்ணப்பித்தார்.
அவர், மொபைல் போனில் தொடர்பு கொண்டு, 'வாரிசு வேலைக்கு சகஜமாக பழக வேண்டும். தேவையான வேலைகளை செய்து தர வேண்டும்' என, பேசியுள்ளார். அதிர்ந்து போன பெண், அவர் பேசியதை பதிவு செய்துள்ளார்.
சேலம் டவுன் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார். விசாரணையில் பாலியல் தொந்தரவு தந்தது தெரிய வந்தது. பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில், தேவராஜனை போலீசார் நேற்று கைது செய்தனர்.