sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

லோக்சபா தேர்தல் புறக்கணிப்பு பேனர் கறுப்புக்கொடியை அகற்றிய போலீஸ்

/

லோக்சபா தேர்தல் புறக்கணிப்பு பேனர் கறுப்புக்கொடியை அகற்றிய போலீஸ்

லோக்சபா தேர்தல் புறக்கணிப்பு பேனர் கறுப்புக்கொடியை அகற்றிய போலீஸ்

லோக்சபா தேர்தல் புறக்கணிப்பு பேனர் கறுப்புக்கொடியை அகற்றிய போலீஸ்


ADDED : மார் 15, 2024 03:44 AM

Google News

ADDED : மார் 15, 2024 03:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ரயில்வே சுரங்கப்பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து லோக்சபா தேர்தலை புறக்கணிப்பதாக பேனர், கறுப்பு கொடி கட்டப்பட்ட நிலையில், அவற்றை போலீசார் அகற்றினர்.

ஆத்துார் அருகே காட்டுக்கோட்டை வழியே, சேலம் - விருதாசலம் அகல ரயில் பாதை செல்கிறது. அதில் காட்டுக்கோட்டை ஊராட்சி, வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவில் அருகே ரயில்வே கேட் உள்ளது. அந்த கேட்டை அகற்றிவிட்டு, 9.96 கோடி ரூபாயில், சுரங்கப்பாலம் அமைக்க, ரயில்வே துறை மூலம் கட்டுமானப்பணி நடக்கிறது. அப்பணியை நிறுத்தக்கோரி, கடந்த பிப்., 5ல், காட்டுக்கோட்டை, சதாசிவபுரம், சாத்தப்பாடி, புனல்வாசல், ஒதியத்துார், வளையமாதேவி, சார்வாய்புதுார், சார்வாய் உள்பட, 8 கிராம மக்கள், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் நடவடிக்கை இல்லை. இதனால் லோக்சபா தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக, நேற்று காலை, விவசாயிகள் சங்கத்தினர், போராட்டக்குழுவினர், மக்கள் சார்பில் ஆங்காங்கே பேனர் வைத்து, ஊர் எல்லை, வழிப்பாதைகளில் கறுப்புக்கொடி கட்டப்பட்டன. தொடர்ந்து தலைவாசல் தாசில்தார்

அன்புசெழியன், ஆத்துார் ஊரக போலீசார், அந்த பேனர், கறுப்புக்கொடிகளை உடனே

அகற்றினர்.

இதுகுறித்து ஐக்கிய விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சரவணன் கூறுகையில், ''ஓரிரு வாரத்தில் கலெக்டர், இதுதொடர்பாக தீர்வு காணவில்லை எனில், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us