/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விபத்தில் தறி தொழிலாளி பலி நண்பரும் 'ஐசியு'வில் அனுமதி
/
விபத்தில் தறி தொழிலாளி பலி நண்பரும் 'ஐசியு'வில் அனுமதி
விபத்தில் தறி தொழிலாளி பலி நண்பரும் 'ஐசியு'வில் அனுமதி
விபத்தில் தறி தொழிலாளி பலி நண்பரும் 'ஐசியு'வில் அனுமதி
ADDED : ஜன 23, 2025 06:21 AM
சேலம்: சேலம், அம்மாபேட்டை, ராமநாதபுரத்தை சேர்ந்தவர் லோக-நாதன், 48, பட்டைய நாயக்கர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன், 45. நண்பர்களான இருவரும் தறி தொழிலாளிகள். நேற்று இரவு, 8:15 மணிக்கு, உடையாப்பட்டி மின்வாரியம் அலுவலகம் எதிரே, ஹீரோ ேஹாண்டா பைக்கில் சென்று கொண்டிருந்தனர். பார்த்-திபன் ஓட்டினார்.
அப்போது அந்த வழியே சென்ற, டாடா 'ஏசி' சரக்கு வாகனம் உர-சியதில், பைக்கில் சென்றவர்கள் தடுமாறி, சாலை நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதி விழுந்தனர். இதில் படுகாயமடைந்த இரு தொழிலாளிகளும் மீட்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் லோகநாதன் வழியில் இறந்து-விட்டார். கோமா நிலைக்கு சென்ற பார்த்திபனுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

