sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அடிக்கடி மின் தடையால் பழுதாகும் தறி; தி.மு.க.,-- எம்.பி.,யிடம் மக்கள் குமுறல்

/

அடிக்கடி மின் தடையால் பழுதாகும் தறி; தி.மு.க.,-- எம்.பி.,யிடம் மக்கள் குமுறல்

அடிக்கடி மின் தடையால் பழுதாகும் தறி; தி.மு.க.,-- எம்.பி.,யிடம் மக்கள் குமுறல்

அடிக்கடி மின் தடையால் பழுதாகும் தறி; தி.மு.க.,-- எம்.பி.,யிடம் மக்கள் குமுறல்


ADDED : ஜூலை 15, 2024 11:54 PM

Google News

ADDED : ஜூலை 15, 2024 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: 'அடிக்கடி மின் தடை ஏற்படுவதால், தறி உற்பத்தி குறைந்து வாழ்-வாதாரம் பாதிக்கிறது' என, பாதிக்கப்பட்ட மக்கள் எம்.பி., செல்-வகணபதியிடம் முறையிட்டனர்.

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றியம், நிலவாரப்பட்டி ஊராட்சியில், கொசு வலை மற்றும் விசைத்தறி தொழிலை நம்பி, ஏராளமான குடும்பத்தினர் உள்ளனர். அங்கு, தாசநாயக்கன்பட்-டியில் உள்ள மின்சார வாரியம் மூலம் மின் வினியோகம் செய்-யப்படுகிறது. சேலம் தி.மு.க.,-எம்.பி.,செல்வகணபதி, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க நிலவாரப்பட்டி சென்றார். அவரிடம், 'நாள்தோறும் இரவு, பகல் பாராமல் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது.

கொசு-வலை தறி மற்றும் விசைத்தறி பழுது ஏற்பட்டு, உற்பத்தி குறைந்து, வாழ்வாதாரம் பாதிக்கிறது. அறிவிக்கப்படாத மின் தடையால், தறி தொழில் நலிவடைந்து வருகிறது. பள்ளி, கல்-லுாரி மாணவ, மாணவிகள் படிக்கும் சமயத்தில், மின் வெட்டு ஏற்படுவதால், மிகவும் சிரமம்படுகிறோம். தடையின்றி மின்சாரம் வினியோகிக்க வேண்டும்' என்றனர்.மேலும் இது குறித்து, எம்.பி.,யிடம் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us