ADDED : ஜன 27, 2024 03:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி: இடைப்பாடி அருகே தேவூர், காவேரிப்பட்டி அக்ரஹாரத்தை சேர்ந்தவர் கதிர்வேல். இவரது தோட்டத்தில் விளைந்த கரும்புகளை வெட்ட, நேற்று லாரியை அழைத்து
வந்தார்.
குமாரபாளையம், ஓடப்பள்ளி
அக்ரஹாரத்தை சேர்ந்த, டிரைவர் ராமர், 52, ஓட்டி வந்தார். நேற்று மாலை, 6:00 மணிக்கு கதிர்வேல் தோட்டத்தில் நிறுத்தி விட்டு, லாரி மீது ஏறியுள்ளார்.
அப்போது உயர் அழுத்த மின்கம்பி உரசியதில் துாக்கி வீசப்பட்ட ராமர், சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். தேவூர் போலீசார்
விசாரிக்கின்றனர்.

