/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காதல் திருமணம் செய்து பாதுகாப்பு கேட்டு தஞ்சம்
/
காதல் திருமணம் செய்து பாதுகாப்பு கேட்டு தஞ்சம்
ADDED : ஆக 19, 2025 01:30 AM
கெங்கவல்லி, மாயமான கல்லுாரி மாணவி, காதல் திருமணம் செய்து பாதுகாப்பு கேட்டு, கெங்கவல்லி போலீசில் தஞ்சமடைந்தனர்.
கெங்கவல்லி, கணவாய்க்காட்டை சேர்ந்த ரமேஷ் மகள் கீர்த்திகா, 19. இவர், தலைவாசல் தனியார் கல்லுாரியில், பி.பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த, 14ல், கல்லுாரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை என, கெங்கவல்லி போலீசில், அவரது பெற்றோர் புகார் அளித்தனர். நேற்று கீர்த்திகா, கூலமேடு கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் மகன் கோகுல்ராஜ், 29, பொக்லைன் டிரைவரை, நேற்று பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் திருமணம் செய்தார். நேற்று பாதுகாப்பு கேட்டு கீர்த்திகா, கோகுல்ராஜ் ஆகியோர், கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தனர்.
இருவீட்டு பெற்றோரையும் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவியின் பெற்றோர், திருமணத்தை ஏற்காததால், திருமணம் செய்த கோகுல்ராஜூடன், கீர்த்திகாவை அனுப்பி வைத்தனர்.