ADDED : ஜன 16, 2025 06:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல்: சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் மகர ஜோதி நாளில் நடக்கும் மகரவிளக்கு பூஜை போன்று, தலைவாசல் அருகே வீரகனுார் ஐயப்பன் கோவிலில் நடத்தப்படுகிறது.
அதன்படி நேற்று முன்தினம், வீரகனுாரில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து, தலைச்சுமையாக தங்க அங்கிகளை ஊர்வலமாக கொண்டு வந்து, ஐயப்பன் கோவிலில் வழிபாடு நடந்தது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் மகரஜோதி ஏற்றி தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

