/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கிணற்றில் இருந்து ஆண் சடலம் மீட்பு
/
கிணற்றில் இருந்து ஆண் சடலம் மீட்பு
ADDED : ஜூன் 17, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரிப்பட்டி, காரிப்பட்டி அடுத்த மின்னாம்பள்ளி பகுதியில் உள்ள விவசாயி கண்மணி, 47, என்பவருக்கு சொந்தமான கிணற்றில், 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் நேற்று காலை
கிடந்தது.
அப்பகுதியினர் கொடுத்த தகவல்படி காரிப்பட்டி போலீசார், வாழப்பாடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, கிணற்றில் இறங்கி கயிறு மூலம் ஆண் சடலத்தை மீட்டனர். மின்னாம்பள்ளி வி.ஏ.ஓ., கார்த்தி புகாரின் பேரில், காரிப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து, உயிரிழந்தது யார் என விசாரிக்கின்றனர்.