/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மங்கம்மாள் கோவில் உண்டியல் உடைப்பு
/
மங்கம்மாள் கோவில் உண்டியல் உடைப்பு
ADDED : மார் 19, 2024 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல்:சேலம் மாவட்டம், ராஜகோபாலபுரம் மங்கம்மாள் கோவிலை, பூசாரி நிரஞ்சன், நேற்று முன்தினம் இரவு பூட்டிச் சென்றார். நேற்று காலை, 6:00 மணிக்கு வந்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு, பணம், காணிக்கை பொருட்கள் திருடு போனது தெரிந்தது. அத்துடன் உண்டியலை, வெளிப்பகுதியில் வீசிச் சென்றிருந்தனர்.
மேலும், அம்மனுக்கு அணிவித்திருந்த தாலி, வெள்ளி கவசம், பித்தளை மணி உள்ளிட்ட பொருட்கள் திருடுபோனதும் தெரிந்தது.
தர்மகர்த்தா சுப்புராஜ் புகாரின்படி, வீரகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

