/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மஞ்சப்பை விருது: பள்ளி, கல்லுாரிகள்,வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்
/
மஞ்சப்பை விருது: பள்ளி, கல்லுாரிகள்,வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்
மஞ்சப்பை விருது: பள்ளி, கல்லுாரிகள்,வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்
மஞ்சப்பை விருது: பள்ளி, கல்லுாரிகள்,வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஏப் 01, 2025 01:45 AM
மஞ்சப்பை விருது: பள்ளி, கல்லுாரிகள்,வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்
நாமக்கல்:'தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத இடமாக மாற்றும் பள்ளி, கல்லுாரிகள், வணிக நிறுவனங்களுக்கு, 'மஞ்சப்பை விருது' வழங்கப்படுகிறது. அதற்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:'மீண்டும் மஞ்சப்பை' பிரசாரத்தை முன்னெடுத்து செல்லும் வகையில், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர், 2022-23ல், மஞ்சப்பை விருதுகளை சட்டசபையில் அறிவித்தார். அதில், ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்குகள் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த, மூன்று பள்ளிகள், முன்று கல்லுாரிகள், மூன்று வணிக நிறுவனங்களுக்கு, முதல் பரிசு, 10 லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசு, ஐந்து லட்சம் ரூபாய், மூன்றாம் பரிசு, மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்படும் என, தெரிவித்திருந்தார்.
அதன்படி, சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப்பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும், தங்கள் வளாகங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றுவதற்கும் முன்மாதிரியான பங்களிப்பை செய்த பள்ளி, கல்லுாரிகள், வணிக நிறுவனங்களுக்கு, 'மஞ்சப்பை' விருதுகளை வழங்க முன்மொழிகிறது. விண்ணப்ப படிவங்கள், கலெக்டர் அலுவலக இணையதளத்திலும், தமிழக மாசுகட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்திலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பம் சமர்ப்பிக்க, வரும், மே, 1 கடைசி நாள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.