/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலம்
/
மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலம்
ADDED : செப் 05, 2025 01:39 AM
ஆத்துார், ஆத்துார் அருகே கொத்தாம்பாடி, பாரதியார் நகரில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில், கடந்த ஆக., 26ல் காப்பு கட்டுதலுடன் தேர் திருவிழா தொடங்கியது. நேற்று முன்தினம், பால் குடம், மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. நேற்று மாலை, 4:00 மணிக்கு, 20 அடி உயர தேரை, ஏராளமான பக்தர்கள், வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியே இழுத்துச்சென்று, இரவு, 7:00 மணிக்கு கோவிலை அடைந்தனர். பின் அங்கு சுவாமியை, பக்தர்கள் வழிபட்டனர்.
தேர் வெள்ளோட்டம்
ஆத்துார் அருகே புது உடையம்பட்டி மாரியம்மன் கோவிலில், 10 லட்சம் ரூபாயில், 9 அடி உயரத்தில் புது தேர் வடிவமைக்கப்பட்டது. அதன் வெள்ளோட்ட விழா நேற்று நடந்தது. தேர் மீது கும்ப கலசம் வைத்து, ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து, புது உடையம்பட்டியில் உள்ள, 4 தெருக்கள் வழியே இழுத்துச்சென்று, கோவிலை அடைந்தனர். தொடர்ந்து திரளான பக்தர்கள், தரிசனம் செய்தனர்.