/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 04, 2025 02:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், ஜன. 4-
மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கம் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தலைவர் பாலாம்பிகை தலைமை வகித்தார்.
அதில், பணியில் சேரும்போது, 2 மணி நேர வேலை என கூறப்பட்ட நிலையில் தற்போது, 8 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என்ற முறையை மாற்றுதல்; அடையாள அட்டை, சீருடை வழங்குதல்; மகப்பேறு விடுமுறை; அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சி.ஐ.டி.யு., மாநில குழு உறுப்பினர் வெங்கடாபதி வைரமணி, அங்கன்வாடி சங்க மாவட்ட செயலர் வசந்தகுமாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.