/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நடப்பாண்டில் 6ம் முறை மேட்டூர் அணை நிரம்பியது
/
நடப்பாண்டில் 6ம் முறை மேட்டூர் அணை நிரம்பியது
ADDED : செப் 03, 2025 02:41 AM
மேட்டூர்:மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த ஜூன், 29, ஜூலை, 5, 20, 25, ஆக., 20 என, நடப்பாண்டில் மேட்டூர் அணை, 5 முறை நிரம்பியது. இரு நாட்களாக கர்நாடகாவில் உள்ள கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து வினாடிக்கு, 35,000 கனஅடி நீர் உபரியாக காவிரியில் வெளியேற்றப்பட்டது.
அந்த நீர் தொடர்ந்து வந்ததால், கடந்த, 30ல், 118.65 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், படிப்படியாக அதிகரித்து நடப்பாண்டில், 6ம் முறையாக நேற்று காலை, 8:00 மணிக்கு, முழு கொள்ளளவான, 120 அடியை எட்டியது.
அப்போது, அணைக்கு வினாடிக்கு, 35,800 கனஅடி நீர் வந்தது. அதில் டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு, 22,500 கனஅடி, கால்வாய் பாசனத்துக்கு, 800 கனஅடி, உபரியாக, 16 கண் மதகு வழியே, 12,500 கனஅடி என, 35,800 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
தொடர்ந்து மாலை, 6:00 மணிக்கு நீர்வரத்து வினாடிக்கு, 28,800 கனஅடியாக சரிந்தது. இதனால் வினாடிக்கு, 22,500 கனஅடி நீர் டெல்டா பாசனத்துக்கும், 800 கனஅடி நீர் கால்வாய் பாசனத்துக்கும், மீதி, 5,500 கனஅடி நீர், 16 கண் மதகு வழியே உபரியாக வெளியேற்றப்பட்டது.