/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை நீர் திறப்பு; 3,000 கன அடியாக உயர்வு
/
மேட்டூர் அணை நீர் திறப்பு; 3,000 கன அடியாக உயர்வு
ADDED : அக் 21, 2024 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: கர்நாடகா - தமிழக எல்லையிலுள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், மேட்டூர் அணைக்கு கடந்த, 13ல் வினாடிக்கு, 6,445 கன அடி நீர் வரத்தானது. 14ல், 17,596 கனஅடியாக அதிகரித்தது. அதேசமயம் டெல்டா மாவட்டங்களில் பரவலாக பெய்த மழையால், 13ல் மேட்டூர் அணை நீர்திறப்பு, 500 கன அடியாக குறைக்கப்பட்டது.
இதனிடையே டெல்டா மாவட்டங்களில் மழை தீவிரம் குறைய, நேற்று காலை, 8:00 மணி முதல், மேட்டூர் அணையில் இருந்து, 3,000 கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.