/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை உபரிநீர் திறப்பு நீர்வரத்து திடீர் சரிவால் நிறுத்தம்
/
மேட்டூர் அணை உபரிநீர் திறப்பு நீர்வரத்து திடீர் சரிவால் நிறுத்தம்
மேட்டூர் அணை உபரிநீர் திறப்பு நீர்வரத்து திடீர் சரிவால் நிறுத்தம்
மேட்டூர் அணை உபரிநீர் திறப்பு நீர்வரத்து திடீர் சரிவால் நிறுத்தம்
ADDED : ஜூலை 22, 2025 02:13 AM
மேட்டூர், மேட்டூர் அணை உபரிநீர் திறப்பு நீர்வரத்து திடீர் சரிவால் நேற்று மதியம், 12:00 மணிக்கு நிறுத்தப்பட்டது.
மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரு வாரத்துக்கு பின்பு நேற்று முன்தினம் காலை, 8:00 மணி நிரம்பியது. அணையில் இருந்து இரண்டாவது முறையாக வினாடிக்கு, 8,500 கனஅடி உபரிநீர், 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டது.நேற்று முன்தினம் வினாடிக்கு, 31,500 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து கர்நாடகா அணைகளின் உபரி நீர் திறப்பு குறைந்ததால் நேற்று மதியம், 12:00 மணிக்கு வினாடிக்கு, 22,500 கனஅடியாகவும், மாலை, 6:00 மணிக்கு, 19,000 கனஅடியாகவும் சரிந்தது.
அதற்கேற்ப நேற்று மதியம், 12:00 மணிக்கு வினாடிக்கு, 22,500 கனஅடியாக இருந்த டெல்டா பாசன நீர் திறப்பு மாலை, 6:00 மணிக்கு, 18,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. கால்வாயில் வினாடிக்கு, 500 கனஅடி நீர் திறக்கப்பட்டது. நீர்வரத்து குறைந்ததால் நேற்று முன்தினம் காலை, 16 கண் மதகில் வெளியேற்றப்பட்ட, 8,500 கனஅடி உபரி நீர் நேற்று மதியம், 12:00 மணிக்கு நிறுத்தப்பட்டது.