sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு; ஆயில் மோட்டார்களை அகற்ற முடிவு

/

மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு; ஆயில் மோட்டார்களை அகற்ற முடிவு

மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு; ஆயில் மோட்டார்களை அகற்ற முடிவு

மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு; ஆயில் மோட்டார்களை அகற்ற முடிவு


ADDED : ஜூலை 02, 2024 07:22 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர் : மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்து வருவதால், நீர்-பரப்பு பகுதியில் சாகுபடிக்காக கிணறுகளில் வைத்துள்ள ஆயில் மோட்டார்களை அகற்ற, நீர்-வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்-கொண்டுள்ளனர்.

மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தீவிரம் அடைந்த மழையால் நேற்று முன்தினம் வினாடிக்கு, 227 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து நேற்று, 1,038 கனஅடியாக அதிகரித்தது. நேற்று முன்-தினம், 39.75 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று, 39.74 அடியாகவும், 11.96 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு, 11.95 டி.எம்.சி.,யாகவும் சற்று குறைந்தது.

மேட்டூர் அணை வறண்ட நீர்பரப்பு பகுதியில், ஏராளமான கிணறுகள் உள்ளன. அந்த கிணற்று நீரை ஆயில் மோட்டார் மூலம் உறிஞ்சி, விவசா-யிகள் சுற்றுப்பகுதியில் எள், பருத்தி, சோளம், வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்-கின்றனர்.

அணை நீர்மட்டம் வெகுவாக சரிந்ததால் நிலத்-தடி நீரை பாதுகாக்கும் வகையில், நீர்பரப்பு பகு-தியில் கிணறுகளில் இருந்து தண்ணீர் உறிஞ்சு பயிர் சாகுபடி செய்ய, நீர்வளத்துறை அதிகா-ரிகள் தடை விதித்துள்ளனர்.

கடந்த இரு வாரங்களாக, நீர்பரப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, விவசாயிகளிடம் கிணற்று நீரை ஆயில் மோட்டார் பயன்படுத்தி தண்ணீர் எடுக்க வேண்டாம் என, அதிகாரிகள் வலியுறுத்-தியுள்ளனர்.

அதற்கேற்ப பெரும்பாலான விவசாயிகள், ஆயில் மோட்டார்களை அங்கிருந்து எடுத்து சென்றுள்-ளனர். சில இடங்களில் உள்ள மோட்டார்களை அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us