sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்'

/

'பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்'

'பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்'

'பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்'


ADDED : ஏப் 23, 2025 01:11 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்ககிரி:சங்ககிரி, இடைப்பாடி வருவாய் உட்கோட்ட அளவில், விவசாயிகள் குறைதீர் கூட்டம், சங்ககிரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., லோகநாயகி தலைமை வகித்தார். அதில் விவசாயிகள் பேசியதாவது:

பால் உற்பத்தியாளர் சங்க மாநில துணை செயலர் மணி: தனியார் பால் நிறுவனங்கள், ஆவினை விட கூடுதலாக லிட்டருக்கு, 10 ரூபாய் கொடுத்து கொள்முதல் செய்வதால் ஆவினுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் ஊற்றும் விவசாயிகளின் எண்ணிக்கை தினமும் குறைந்து வருகிறது. இதனால் தனியார் நிறுவனங்கள் கொடுக்கும் விலையை போல், ஆவினுக்கு பால் ஊற்றும் விவசாயிகளுக்கு தமிழக அரசு வழங்க, அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி சத்தியராஜ்: கூட்டுறவு கடன் சங்க விவசாயிகளுக்கு நகை கடன் வழங்க வேண்டும். சங்ககிரி புது பஸ் ஸ்டாண்ட் அருகே உழவர் சந்தை திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குறுக்குப்

பாறையூர் சுப்ரமணி: -சூரியமலையில் இருந்து மாடுகள், குரங்குகள், மான்கள், மயில்கள் அதிகளவில் வந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குறுக்குப்பாறையூரில் அறுவடை செய்த பொருட்களை உலர வைக்க உலர் கான்கிரீட் தரைத்தளம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

ஆர்.டி.ஓ., லோகநாயகி, 'அனைத்து கோரிக்கைகளும் அரசுக்கு பரிந்துரைக்கப்படும்' என கூறி கூட்டத்தை முடித்தார். தாசில்தார் வாசுகி, வேளாண் அலுவலர்கள், சங்ககிரி, இடைப்பாடி தாலுகாவில் உள்ள அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us