sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

152 மாணவ, மாணவியருக்கு சைக்கிள் வழங்கிய அமைச்சர்

/

152 மாணவ, மாணவியருக்கு சைக்கிள் வழங்கிய அமைச்சர்

152 மாணவ, மாணவியருக்கு சைக்கிள் வழங்கிய அமைச்சர்

152 மாணவ, மாணவியருக்கு சைக்கிள் வழங்கிய அமைச்சர்


ADDED : டிச 24, 2025 08:58 AM

Google News

ADDED : டிச 24, 2025 08:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவியருக்கு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், நேற்று சைக்கிள் வழங்கினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: மாவட்டத்தில், 2025 - 26 கல்வி ஆண்டிற்கான சைக்கிள் வழங்கும் திட்டத்தில், அரசு, அதன் உதவி பெறும், 178 பள்ளிகளில், பிளஸ் 1 படிக்கும், 25,159 பேருக்கு சைக்கிள் வழங்கப்படுகிறது. அதில் தற்போது கன்னங்குறிச்சி அரசு பள்ளியில், 100 மாணவர், 52 மாணவியருக்கு சைக்கிள் வழங்கப்பட்டது.

மேலும் மோட்டாங்குறிச்சி, கேசவன் நகர், டி.கே.வெங்கடாஜலம் தெரு உள்ளிட்ட பகுதிகளில், கலைஞர் மேம்பாட்டு திட்டத்தில், 1.05 கோடி ரூபாயில் தார்ச்சாலை, கழிவுநீர் கால்வாய் பணிக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. .கொண்டப்பநாயக்கன்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தால் நடத்தப்படும் பெரியார் நகர் ரேஷன் கடைக்கு, சேலம் வடக்கு தொகுதி, எம்.எல்.ஏ., நிதி, 15 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட புது கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதாதேவி, கூடுதல் கலெக்டர் பொன்மணி, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ராஜ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us