/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.1 கோடியில் 300 கறவை மாடுகள் பழங்குடி மக்களுக்கு அமைச்சர் வழங்கல்
/
ரூ.1 கோடியில் 300 கறவை மாடுகள் பழங்குடி மக்களுக்கு அமைச்சர் வழங்கல்
ரூ.1 கோடியில் 300 கறவை மாடுகள் பழங்குடி மக்களுக்கு அமைச்சர் வழங்கல்
ரூ.1 கோடியில் 300 கறவை மாடுகள் பழங்குடி மக்களுக்கு அமைச்சர் வழங்கல்
ADDED : நவ 24, 2024 01:07 AM
பெத்தநாயக்கன்பாளையம், நவ. 24-
அமைச்சர் ராஜேந்திரன், 1.05 கோடி ரூபாய் மதிப்பில், 300 கறவை மாடுகளை, பழங்குடி மக்களுக்கு வழங்கினார்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே கருமந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில், பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நேற்று நடந்தது. அதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், 1.05 கோடி ரூபாய் மதிப்பில், 300 கறவை மாடுகளை வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது: முதல்வர், கடந்த மூன்றரை ஆண்டுகளில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும்படி பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். சேலம் மாவட்டத்தில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை தேவைகளான சாலை, உயர்மட்ட நீர் தேக்க தொட்டி உள்ளிட்ட பல்வேறு பணிகளை நிறைவேற்றியுள்ளார்.
பழங்குடி மாணவ, மாணவியர், எதிர்காலத்தில் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கில், கருமந்துறையில் உள்ள அரசு பழங்குடியினர் உறைவிட பள்ளிகளில் கட்டடங்கள், சமையலறை கூடம் கட்டுதல் உள்ளிட்ட பணிகள், 1.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மகளிர் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய வேண்டும் என்ற நோக்கில், 300 கறவை மாடுகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று, 1.93 கோடி ரூபாய் மதிப்பில் பழங்குடியினருக்கு வீடுகள் கட்டும் பணி நடக்கிறது. இந்நிகழ்ச்சி மூலம் பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தில், பழங்குடியினர் நலத்துறை மூலம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, 539 பேருக்கு, 2.91 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, தி.மு.க.,வின், சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம், ஆத்துார் ஆர்.டி.ஓ., பிரியதர்ஷினி, பழங்குடியினர் நலத்துறை திட்ட அலுவலர் சுகந்தி பரிமளம், வடக்குநாடு ஊராட்சி தலைவர் வெங்கடேஷ், தெற்குநாடு ஊராட்சி தலைவர் பூங்கொடி, தி.மு.க.,வின், பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றிய செயலர் சிவராமன், உள்ளாட்சி பிரதிநிதிகள்
பங்கேற்றனர்.