/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பல்வேறு திட்டப்பணிகள் அமைச்சர் துவக்கிவைப்பு
/
பல்வேறு திட்டப்பணிகள் அமைச்சர் துவக்கிவைப்பு
ADDED : ஆக 13, 2025 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: காடையாம்பட்டி, மகாலட்சுமி நகரில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நேற்று நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்-திரன் பார்வையிட்டு, 10 பேருக்கு, தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகங்கள், 6 பேருக்கு வீட்டு மனை பட்டா, 2 பேருக்கு காதொலி கருவி உள்பட, 28 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து டவுன் பஞ்சாயத்தில் பைப்லைன் அமைத்தல், சாலை விரிவாக்கம் உள்பட, 7 பணிகளுக்கு, 1.49 கோடி ரூபாயில் திட்டப்பணிகளை தொடங்கிவைத்தார். டவுன் பஞ்சாயத்து உதவி இயக்குனர் குருராஜன், காடையாம்பட்டி டவுன் பஞ்சாயத்து தலைவர் குமார், துணைத்தலைவர் திருநாவுக்-கரசு உள்பட பலர் பங்கேற்றனர்.