ADDED : மார் 25, 2024 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:மதுரை,
கீழக்கரையை சேர்ந்தவர் முனியப்பன், 34.
இவரை, புதுக்கோட்டை மாவட்டம்
மங்களம் போலீசார், போதைப்பொருள் வழக்கில் கைது செய்து, கடந்த
டிசம்பரில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவரது அறையில், சிறை
அதிகாரிகள், நேற்று முன்தினம் சோதனை நடத்தி, தலா இரு மொபைல் போன்கள்,
சார்ஜர், ஒரு பேட்டரியை பறிமுதல் செய்து அஸ்தம்பட்டி போலீஸ்
ஸ்டேஷனில் ஒப்படைத்து புகார் அளித்தனர். போலீசார் மொபைல் போனின்
அழைப்பு விபரங்களை வைத்து யார் யார் பயன்படுத்தினர் என
விசாரிக்கின்றனர்.

