/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மொபைல் கடையில் பணம், உதிரிபாகம் திருட்டு
/
மொபைல் கடையில் பணம், உதிரிபாகம் திருட்டு
ADDED : ஜன 09, 2025 07:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல்: பெரம்பலுார் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே, நுாத்தப்பூரை சேர்ந்தவர் ராஜ்குமார், 30. இவர், தலைவாசல் அருகே வீரகனுார் பஸ் ஸ்டாண்ட் பகுதியொட்டி, மொபைல் போன் கடை வைத்-துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு, கடையை பூட்டி சென்றார். நேற்று காலை வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்-தது. உள்ளே சென்று பார்த்தபோது, டிராவில் இருந்த, 3,000 ரூபாய், தலா, 1,500 ரூபாய் மதிப்பில், 70க்கும் மேற்பட்ட மொபைல்போன் டிஸ்பிளே கவர்களை மர்ம நபர்கள் திருடிச்-சென்றது தெரிந்தது. ராஜ்குமார் புகார்படி வீரகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

