ADDED : ஜூன் 10, 2025 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், தாதம்பட்டி ஹோலிகிராஸ் பின்புறம் செல்வா நகரை சேர்ந்தவர் சத்யா, 38. இவர் கடந்த, 7ல், வெளியே சென்று விட்டு, இரவு வீட்டின் முன் தனது ஹோண்டா டியோ மொபட்டை நிறுத்தி விட்டு துாங்க சென்றார்.
மறுநாள் காலை பார்த்த போது, வாகனம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இது குறித்து வீராணம் போலீசில் சத்யா அளித்த புகார்படி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.