sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாநகராட்சி இடத்தில் மசூதி; பா.ஜ., எதிர்ப்பால் பரபரப்பு

/

மாநகராட்சி இடத்தில் மசூதி; பா.ஜ., எதிர்ப்பால் பரபரப்பு

மாநகராட்சி இடத்தில் மசூதி; பா.ஜ., எதிர்ப்பால் பரபரப்பு

மாநகராட்சி இடத்தில் மசூதி; பா.ஜ., எதிர்ப்பால் பரபரப்பு


ADDED : ஜூலை 29, 2025 05:26 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்,; சேலம் மாநகராட்சி இடத்தில் மசூதி கட்டப்படுவதற்கு, பா.ஜ.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம், குகை பெரியார் வளைவு அருகே மாநகராட்சிக்கு சொந்தமான, 6 ஏக்கர் நிலம் உள்ளது. அதை மயானமாக, இஸ்லாமியர் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் வீடு மற்றும் மசூதி கட்டுமான பணிகளை, சில மாதங்களுக்கு முன் துவங்கினர். அப்போது, பா.ஜ.,வினர் மற்றும் ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநகராட்சி நிர்வாகம் பேச்சு நடத்தி, கட்டுமான பணிகளை நிறுத்தியது.

இந்நிலையில், மீண்டும் அதே இடத்தில் இஸ்லாமியர்கள் கட்டுமான பணிகளை தொடர்வதாக வந்த தகவலையடுத்து, பா.ஜ.,வினர் நேற்று மதியம் அங்கு திரண்டனர். இஸ்லாமியரும் குவிந்தனர். இதனால், பதற்றமான சூழல் ஏற்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இரு தரப்பினரிடமும் மாநகராட்சி அதிகாரிகள், செவ்வாய்ப்பேட்டை போலீசார் பேச்சு நடத்தினர். புதிதாக கட்டடம் கட்டக்கூடாது என, பா.ஜ., நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின், உதவி கமிஷனர் ஹரிசங்கரி உள்ளிட்ட போலீசார், பேச்சு நடத்தி, மாநகராட்சி அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய பின், பணிகளை நிறுத்துமாறு கூறினர். அதன்படி, கட்டுமான பணிகளை இஸ்லாமியர் நிறுத்தினர். இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us