ADDED : டிச 19, 2024 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், டிச. 19-
சேலம், சிவதாபுரம் அருகே, பெருமாம்பட்டி வலியக்காட்டை சேர்ந்த குமார் மனைவி கோமதி, 32. இவர்
களது மகள் தீபிகா, 13, மகன் கவுதம், 11. இருவரும் பெத்தாம்பட்டி அரசு பள்ளியில் படிக்கின்றனர். சில நாட்களுக்கு முன் குமாருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், வீட்டில் இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவதாக கூறிச்சென்ற கோமதி வீடு திரும்பவில்லை. குழந்தைகளும் வரவில்லை. இதுகுறித்து கோமதியின் தந்தை பெருமாள் புகார்படி, இரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.

