ADDED : ஜூலை 10, 2025 01:40 AM
தாரமங்கலம், அந்தியூரை சேர்ந்தவர் புவனேஸ்வரி, 24. இவருக்கு, தாரமங்கலம் காட்டுப்பிள்ளையார் கோவிலை சேர்ந்த விக்னேஷூடன் திருமணமாகி, ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த ஜூன், 18ல் புவனேஸ்வரி குழந்தைகளை, கைலாசநாதர் கோவில் அருகே அங்கன்வாடியில் சேர்த்து வருவதாக கூறி சென்றார். பின் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், புவனேஸ்வரி மாமியார் சித்ரா புகார்படி தாரமங்கலம் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து அவர்களை தேடுகின்றனர்.
மற்றொரு சம்பவம்
பென்னாகரம் அருகே பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் தமிழ்செல்வன், 23. நேற்று முன்தினம் தாரமங்கலம் அருகே பெரியாம்பட்டியில் உள்ள தங்கை மகளின் காதணி விழாவுக்கு வந்தார். அப்போது அங்குள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் இருந்த தமிழ்செல்வன், நண்பர்களுடன் தாரமங்கலம் செல்வதாக கூறி சென்றார். பின் திரும்பி வரவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், தமிழ்செல்வனின் தாய் கம்சலா புகார்படி, தாரமங்கலம் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து தேடுகின்றனர்.