ADDED : ஜூலை 13, 2025 01:51 AM
அ நிறம் | அளவு
இடைப்பாடி சேலம் மாவட்டம் பூலாம்பட்டியில் இருந்து ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டைக்கு, காவிரி ஆற்றில் விசைப்படகு போக்குவரத்து இயக்கப்படுகிறது. காவிரி ஆற்றில் கடந்த, 1ல் அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால் விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
தற்போது காவிரி ஆற்றில் நீர் திறப்பது குறைக்கப்பட்டதால், விசைப்படகு போக்குவரத்து நேற்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. இதனால் விசைப்படகில் பயணித்து வந்த மக்கள் நிம்மதி அடைந்தனர்.
