/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இளம்பிள்ளையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு அரசு பஸ் இயக்க நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
/
இளம்பிள்ளையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு அரசு பஸ் இயக்க நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
இளம்பிள்ளையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு அரசு பஸ் இயக்க நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
இளம்பிள்ளையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு அரசு பஸ் இயக்க நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
ADDED : பிப் 28, 2025 07:00 AM
மகுடஞ்சாவடி: இடங்கணசாலை நகராட்சி கூட்டம் அதன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் கமலக்கண்ணன் தலைமை வகித்தார். அதில் நடந்த விவாதம்:
துணைத்தலைவர் தளபதி: பல வார்டுகளில் தெருவிளக்கு பிரச்னை உள்ளது. தலைவர் இரவு, 7:00 மணிக்கு, அனைத்து வார்டு களுக்கும் செல்ல வேண்டும். 100க்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் பழுதாகியுள்ளன.தி.மு.க., கவுன்சிலர் சரஸ்வதி: குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய பள்ளம் தோண்டி மூடாமல் விட்டுள்ளனர்.தி.மு.க., கவுன்சிலர் நதியா: மக்களே எங்கள் வார்டில் அங்கன்வாடி, வணிக வளாகம் வேண்டாம் என்கின்றனர். தி.மு.க., கவுன்சிலர் நாகராஜ்: இளம்பிள்ளையில் இருந்து ஈரோடு, கரூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சென்னை போன்ற வெளி மாவட்டங்களுக்கு, அரசு பஸ் இயக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
அனைத்து கோரிக்கைகளுக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, தலைவர் கமலக்கண்ணன் கூறினார். நகராட்சி கமிஷனர் பவித்ரா, கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.