sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கலெக்டரிடம் புகார் அளித்ததும் நரசிங்கபுரம் கமிஷனர் இடமாற்றம்

/

கலெக்டரிடம் புகார் அளித்ததும் நரசிங்கபுரம் கமிஷனர் இடமாற்றம்

கலெக்டரிடம் புகார் அளித்ததும் நரசிங்கபுரம் கமிஷனர் இடமாற்றம்

கலெக்டரிடம் புகார் அளித்ததும் நரசிங்கபுரம் கமிஷனர் இடமாற்றம்


ADDED : பிப் 22, 2024 07:18 AM

Google News

ADDED : பிப் 22, 2024 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார் : சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, தி.மு.க.,வை சேர்ந்த, நகராட்சி தலைவர் அலெக்சாண்டர், கமிஷனர் முகமது சம்சுதீன், அ.தி.மு.க., - தி.மு.க., கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

அப்போது, அ.தி.மு.க., குழு தலைவர் கோபி தலைமையில் கவுன்சிலர்கள், 'வீட்டு வரி, குடிநீர் வரி, சொத்து வரி வழங்குவதற்கு அலைக்கழிக்கின்றனர். இதுதொடர்பான மனுக்களுக்கு லஞ்சம் கேட்கின்றனர். பலமுறை புகார் அளித்தும், கமிஷனர் உள்ளிட்ட அலுவலர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை' என்றனர்.

இதற்கு, 'விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என, கலெக்டர் பதில் அளித்து சென்றார்.

இதையடுத்து நகராட்சி கமிஷனர் முகமதுசம்சுதீனை, ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சிக்கு இடமாற்றி, நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு உத்தரவிட்டார்.

பட்டா வழங்க கோரிக்கை

ஆத்துார் அருகே ஈச்சம்பட்டியில், 2000ல், அப்போதைய அமைச்சர் ஆறுமுகம், 84 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கினார். அந்த இடத்தில் வசிக்கும், 18 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதி, 32 பேருக்கு வழங்கப்படவில்லை.

அந்த இடம் நீர் நிலை பகுதியாக உள்ளதாக கூறி, வீட்டு வரி ரசீதும் வழங்கப்படவில்லை. இதனால் பட்டா வழங்கக்கோரி, ஆத்துார் பயணியர் மாளிகைக்கு வந்த கலெக்டரிடம், மக்கள் மனு அளித்தனர்.






      Dinamalar
      Follow us