ADDED : பிப் 24, 2024 04:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் : நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த ராஜா அம்மையப்பன், அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.இதுகுறித்து அவரது அறிக்கை:கடந்த, 8 ஆண்டாக பயணித்த நான், இன்றுடன் கட்சியில் இருந்து வெளியேறுகிறேன்.
சில விஷயங்கள், ஜாதி பிரிவினைகள், சமூக படுகொலையை கண்டு, என்னால் இதில் பயணிக்க முடியவில்லை. பொதுக்குழு பெயரில் வெற்று பக்கங்களில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட தொகுதி செயலர்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது. நான் பயணிக்கும் கட்சியில் யார் செயலர், பொருளாளர் என்பதை அறியாமலும், வெளிப்படுத்தாமலும் பயணிக்க விரும்பவில்லை.