sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பணம் கேட்ட முதியவர் கொலை மருமகன், மனைவியுடன் கைது

/

பணம் கேட்ட முதியவர் கொலை மருமகன், மனைவியுடன் கைது

பணம் கேட்ட முதியவர் கொலை மருமகன், மனைவியுடன் கைது

பணம் கேட்ட முதியவர் கொலை மருமகன், மனைவியுடன் கைது


ADDED : ஜன 29, 2025 01:47 AM

Google News

ADDED : ஜன 29, 2025 01:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்:மருத்துவ செலவுக்கு, மாதந்தோறும், 20,000 ரூபாய் கேட்ட முதியவரை அடித்துக்கொன்ற மருமகன், அவரது, 2வது மனைவியை, போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் கொளத்துார், ஏழு பரணைக்காட்டை சேர்ந்தவர் சரத் சந்திரன், 82. இவரது மனைவி நிர்மலா, 75. இவர்களது ஒரே மகள் புனிதா.

இவரை, அப்பகுதியை சேர்ந்த விவசாயி புண்ணியமூர்த்தி, 61, என்பவருக்கு, திருமணம் செய்து கொடுத்திருந்தனர். நிர்மலா இறந்த நிலையில், புனிதாவும், 20 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

இதனால், புண்ணியமூர்த்தி, குரும்பனுாரை சேர்ந்த லட்சுமி, 45, என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு மகள் மற்றும் மகன் உள்ளனர். சரத் சந்திரனுக்கு அப்பகுதியில், 10 ஏக்கர் நிலம் உள்ளது. அதை, அவரது பேரக் குழந்தைகள் பயன்படுத்திக்கொள்ள, உயில் எழுதி வைத்திருந்தார்.

சரத் சந்திரனை மருமகன் புண்ணியமூர்த்தி, அவரது மனைவி லட்சுமி பராமரித்தனர். சரத் சந்திரனுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டதால், மருத்துவமனைக்கு செல்ல பணமின்றி தவித்தார்.

அவர், மருத்துவ செலவுக்கு மாதம், 20,000 ரூபாய் வேண்டும் என, புண்ணியமூர்த்தியிடம் கேட்டார். இதுதொடர்பாக, நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த புண்ணியமூர்த்தி, லட்சுமி ஆகியோர், களி கிண்டும் கம்பால், சரத் சந்திரன் தலையில் தாக்கினர். படுகாயம் அடைந்த அவர் இறந்தார். அதிர்ச்சியடைந்த தம்பதி, கொலையை மறைக்க, சரத் சந்திரன் உடலை அடக்கம் செய்ய முயன்றனர்.

சந்தேகம் அடைந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த, கொளத்துார் போலீசார், விசாரித்தனர்.

விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறிய புண்ணியமூர்த்தி, லட்சுமி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. போலீசாரின் முறையான விசாரணைக்கு பின் அவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டனர்.அவர்களை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us