/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வடமாநில தொழிலாளி துாங்கிய நிலையில் சாவு
/
வடமாநில தொழிலாளி துாங்கிய நிலையில் சாவு
ADDED : ஜன 22, 2026 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: இமாச்சல பிரதேசம் சம்பா மாவட்டத்தை சேர்ந்தவர் ஜோகேந்தர் சிங். அவரது அக்கா மகன் கஜானு. அதே ஊரை சேர்ந்தவர் ஜிதேந்திர குமார். இவர்கள், சேலம், கருப்பூர் அருகே வெள்ளக்கல்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்-தனர். அதே பகுதியில் அறை எடுத்து தங்கியிருந்தனர்.
நேற்று முன்தினம் பணி முடிந்து அறைக்கு சென்றவர்கள் துாங்-கினர். நேற்று அதிகாலை, கஜானுவை எழுப்பும்போது அவர் எழ-வில்லை. உடனே சேலம் அரசு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்-றனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்-தனர். ஜிதேந்திர குமார் புகார்படி கருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

