sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

4 ஆண்டு தி.மு.க., ஆட்சியில் நல்லது எதுவும் நடக்கவில்லை'

/

4 ஆண்டு தி.மு.க., ஆட்சியில் நல்லது எதுவும் நடக்கவில்லை'

4 ஆண்டு தி.மு.க., ஆட்சியில் நல்லது எதுவும் நடக்கவில்லை'

4 ஆண்டு தி.மு.க., ஆட்சியில் நல்லது எதுவும் நடக்கவில்லை'


ADDED : ஜூலை 26, 2025 01:41 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார், விலைவாசி, மின் கட்டண உயர்வை கட்டுப்படுத்த தவறிய, தி.மு.க., அரசை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், ஓமலுார்

சட்டசபை தொகுதிக்குட்பட்ட காடையாம்பட்டியில் கண்டன பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. ஓமலுார் தொகுதி, எம்.எல்.ஏ., மணி தலைமை வகித்தார்.

அதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:

கடந்த, 4 ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில், தவறு மட்டும் நடந்துள்ளது. நல்லது எதுவும் நடக்கவில்லை. உறுப்பினர்களை சேர்க்கிறோம் என, வீடுகள் தோறும் சென்று கதவை தட்டுகின்றனர். மக்கள் துரத்தி அனுப்புகின்றனர். ஓ.டி.பி., கேட்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 4 ஆண்டுகளில், 40 லட்சம் கோடி ரூபாய் கடனை வாங்கியுள்ளனர். மக்களுக்கான ஆட்சி தந்த ஒரே முதல்வர், இ.பி.எஸ்., தான். கும்மிடிப்பூண்டிலிருந்து குமரி வரை சாலைகளை அகலப்படுத்தி, பல பாலங்களை கட்டியவர். இன்னும், 7 மாதங்களில், தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ., வெற்றிவேல், ஒன்றிய செயலர் சுப்ரமணி, நகர செயலர் ஆனந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள்

பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us