/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளின் எண்ணிக்கை 6.32 லட்சமாக அதிகரிப்பு'
/
'மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளின் எண்ணிக்கை 6.32 லட்சமாக அதிகரிப்பு'
'மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளின் எண்ணிக்கை 6.32 லட்சமாக அதிகரிப்பு'
'மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளின் எண்ணிக்கை 6.32 லட்சமாக அதிகரிப்பு'
ADDED : டிச 13, 2025 04:55 AM

சேலம்:முதல்வர் ஸ்டாலின், கருணாநிதி மகளிர் உரிமைத்தொகை விரி-வாக்க திட்டத்தை, சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து சேலத்தில், அமைச்சர் ராஜேந்திரன், மகளிர் உரிமைத்-தொகையை பயனாளிகளுக்கு வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது: சேலம் மாவட்டத்தில், 'உங்க-ளுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில், 1,53,051 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் தகுதி அடிப்படையில், 82,241 விண்ணப்-பங்கள் ஏற்கப்பட்டு, மகளிர் உரிமைத்தொகை, 2ம் கட்டமாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாவட்டத்தில், 5,49,268 மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.அவர்களுடன் சேர்ந்து, மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனா-ளிகள் எண்ணிக்கை, 6,32,509 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். கலெக்டர் பிருந்தாதேவி, எம்.பி.,க்கள் செல்வக-ணபதி, சிவலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.

