ADDED : ஜூலை 09, 2026 01:52 AM
அ நிறம் | அளவு
ஆத்துார்: அனைத்து செவிலியர் சங்கம் சார்பில், ஆத்துார், தென்னங்குடிபா-ளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று ஆர்ப்-பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தி தலைமை வகித்தார். அதில், பல்வேறு கோரிக்கைகளை வலியு-றுத்தினர்.
இதுகுறித்து செவிலியர்கள் கூறியதாவது:
கடந்த, 2015ல் திறன் மேம்பாடு திட்டத்தில், 192 செவிலியர்கள், ஆரம்ப சுகாதார நிலைய பணிகளுக்கு நியமிக்கப்பட்டனர். அவர்-களை, அரசு மருத்துவமனைகளுக்கு இடமாற்ற முயற்சி நடக்கி-றது. இதனால் மருத்துவ பணி பாதிக்கப்படும். ஏற்கனவே காலி பணியிடத்தால் தினமும், 10 முதல், 15 மணி நேரம் பணிபுரியும் சூழல் உள்ளது. அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்-களில் கூடுதல் செவிலியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
