sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

காலி பணியிடங்களை நிரப்ப செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

/

காலி பணியிடங்களை நிரப்ப செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

காலி பணியிடங்களை நிரப்ப செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

காலி பணியிடங்களை நிரப்ப செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 11, 2025 01:31 AM

Google News

ADDED : ஜூலை 11, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கம் சார்பில், சேலம், கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. அதில் ஏராளமான செவிலியர்கள், பல்வேறு கோரிக்கைகள் குறித்தும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

இதற்கு தலைமை வகித்து, மாநில செயலர் விஜயகலா பேசியதாவது: அரசு மருத்துவமனைகளில், 4,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. சேலம் மாவட்டத்தில், 230 செவிலியர்களுக்கு, 80 பேர் மட்டும் உள்ளனர். மீதி பணியிடங்களை, பயிற்சி பெற்றவர்களை கொண்டு மட்டுமே நிரப்ப வேண்டும். கிராம சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலியர்களின் ஊதியத்தில் இருந்து வாடகை பிடித்தம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us