/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஒடிசா வாலிபர் கைது; 24 பவுன் நகை மீட்பு
/
ஒடிசா வாலிபர் கைது; 24 பவுன் நகை மீட்பு
ADDED : மே 03, 2024 07:00 AM
சேலம் : சேலம் ரயில்வே டி.எஸ்.பி., பெரியசாமி, ஜங்ஷனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சேலம், பழைய சூரமங்கலம், பெரியார் நகரை சேர்ந்தவர் மணிவேல், நேற்று அதிகாலை, 2:50 மணிக்கு ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில் நின்றிருந்தார்.
அவரிடம் ஒடிசாவை சேர்ந்த பினாட் நாயக், 33, என்பவர், கத்தியை காட்டி மிரட்டி, 2 பவுன் சங்கிலியை பறித்துச்சென்றார்.இதுதொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து அவரை தேடினர். காலை, 6:30 மணிக்கு ரயில்வே கோட்ட அலுவலகம் அருகே நின்றிருந்த பினாட் நாயக்கை, போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் மீது ஓசூர், தர்மபுரி, ஈரோடு, கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களில், சங்கிலி பறிப்பு உள்பட, 7 வழக்குகள் இருப்பது தெரிந்தது. அவரிடம் இருந்து, 24 பவுன் நகைகளை, ரயில்வே போலீசார் மீட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.