sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரத சப்தமிக்கு சுவாமி சிலை வழங்க அதிகாரிகள் மறுப்பு; உதவி கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

/

ரத சப்தமிக்கு சுவாமி சிலை வழங்க அதிகாரிகள் மறுப்பு; உதவி கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

ரத சப்தமிக்கு சுவாமி சிலை வழங்க அதிகாரிகள் மறுப்பு; உதவி கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

ரத சப்தமிக்கு சுவாமி சிலை வழங்க அதிகாரிகள் மறுப்பு; உதவி கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்


ADDED : பிப் 17, 2024 07:13 AM

Google News

ADDED : பிப் 17, 2024 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : ரத சப்தமி விழாவுக்கு சுவாமி சிலைகள் வழங்க, அதிகாரிகள் மறுத்ததால், பாகல்பட்டி மக்கள், உதவி கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே பாகல்பட்டியில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சென்றாய பெருமாள் கோவில் உள்ளது. அங்கு ரத சப்தமி உற்சவ விழாவையொட்டி, உற்சவர் சுவாமி சிலைகளை வைத்து திருவீதி உலா நடக்கும். பின் அச்சிலைகள், சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் உள்ள உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்படும்.

இதனால் அக்கோவில் அர்ச்சகர்கள், ஊர்மக்கள் நேற்று, உற்சவர் சென்றாய பெருமாள், துளசியம்மாள், லட்சுமி அம்மன் சுவாமி சிலைகளை வாங்க, சுகவனேஸ்வரர் கோவிலில் உள்ள உதவி கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகள், சிலைகளை வழங்க மறுத்துள்ளனர். இதனால் மக்கள், அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். ஒருவழியாக, காலை, 10:00 மணிக்கு வந்த மக்கள், மாலை, 4:30 மணிக்கு சிலைகளை வாங்கிச்சென்றனர். இரவு சுவாமி ஊர்வலம் முடிந்ததும், இன்று காலை மீண்டும் சுவாமி சிலைகள், அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்.

இதுகுறித்து மக்கள் கூறுகையில், 'அர்ச்சகர் தான் கையெழுத்திட்டு வாங்கி வருவார். ஆனால், கோவில் அறங்காவலரின் தீர்மான நகல் வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அறங்காவலர் பண மோசடி செய்துள்ளதாக புகார் கூறியுள்ளோம். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது' என்றனர்.

அதிகாரிகள் கூறுகையில், 'அறங்காவலரின் தீர்மானம் பெற்று தான் சிலைகளை வழங்க வேண்டும். இரு தரப்பினர் இடையே உள்ள பிரச்னையால் தீர்மான நகல் வழங்காமல் இருந்ததால் சிலைகள் வழங்க மறுக்கப்பட்டது. பின் தீர்மானம் பெற்று இணை கமிஷனரிடம் கையெழுத்து பெற்று சிலைகள் வழங்கப்பட்டன' என்றனர்.






      Dinamalar
      Follow us