/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெண்ணிடம் அத்துமீறி வெட்டிய முதியவர் கைது
/
பெண்ணிடம் அத்துமீறி வெட்டிய முதியவர் கைது
ADDED : ஜூலை 05, 2024 01:05 AM
சேலம்: சேலம், மெய்யனுார், அர்த்தனாரி கவுண்டர் தெருவை சேர்ந்தவர், 37 வயது பெண்.
இவருடன், அதே பகுதியை சேர்ந்த வேலு, 52, என்பவரின் குடும்பத்தினர் பழகி வந்தனர். பின் வேலு, அப்-பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அப்பெண், வேலுவுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.கடந்த மே, 29ல் இரும்பாலை, புது ரோட்டில் உள்ள ஓட்டலுக்கு அப்பெண் சென்றார். அங்கு வந்த வேலு, அப்பெண் சேலையை பிடித்து இழுத்துள்ளார். அவர் எதிர்ப்பு தெரிவிக்கவே, ஆத்திரம-டைந்த வேலு, கத்தியால் கை, தலை, முகத்தில் வெட்டிவிட்டு தப்பியுள்ளார். காயம் அடைந்த பெண், சேலம் அரசு மருத்துவம-னையில் அனுமதிக்கப்பட்டார்.அவர் புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரித்தனர். இந்நி-லையில் அப்புகாரை வாபஸ் பெறுமாறு, வேலுவின் மனைவி அலமேலு, 50, அப்பெண்ணை மிரட்டியுள்ளார். இதையடுத்து வேலு, அலமேலு மீது சூரமங்கலம் மகளிர் போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து வேலுவை கைது செய்து அலமேலுவை தேடுகின்றனர்.